Tuesday 26 April 2011

¸¢¡¢ì¸ð §À¡ðʸû.....

¯Ä¸¢ø ¸¢¡¢ì¸ð §À¡ðʨ "Gentlemens game" ±ýÀ¡÷¸û ²¦ÉýÈ¡ø ´ÕŨà ´ÕÅ÷ ¦¾¡Îž¢ø¨Ä, ¸ÊÉÁ¡ö µ¼ ܼ§¾¨Å¢ø¨Ä.

ÁüÈ §À¡ðʸǢû ÌÆ×째 Ó츢ÂòÐÅõ ¦¸¡ÎôÀ¡÷¸û ¬É¡ø º¢Ä §¿Ãí¸Ç¢ø Ìƨŧ¡, ¦ÅüÈ¢¨Â§Â¡ Å¢¼ ¾É¢ ¿ÀÕ째 Ó츢ÂòÐÅõ ¦¸¡ÎôÀ¡÷¸û.

þó¾ Å¢¨Ç¡ðÎ ¦Åû¨ÇÂ÷¸Ç¡ø ¸ñÎÀ¢Êì¸ôÀðÎ «Å÷¸û Á¾õ, ¦Á¡Æ¢¨Â §À¡Ä þÐ×õ º¢ÈôÀ¡¸ ÀÃôÀôÀð¼Ð. þó¾ Å¢¨Ç¡ðÎ þí¸¢Ä¡óÐ ¸¡Ä½¢ ¿¡Î¸Ç¢û ÁðÎõ ¬¾¢ì¸õ ¦ÀüÚ Å¢Çí̸¢ÈÐ. þó¾¢Â¡, À¡ì¸¢Šò¾¡ý, Åí¸§¾ºõ, þÄí¨¸, ¦¾ý¬ô¡¢ì¸¡ ¬¸¢Â ¿¡Î¸Ç¢û¾¡ý þ¾üÌ Ãº¢¸÷¸û «¾¢¸õ. ¬í¸§Ä ¬¾¢ì¸òÐìÌ «ÊÀ½¢Â¡¾ ¿¡Î¸û «ùÅÇÅ¡¸ þó¾ Å¢¨Ç¡ðÊø ¸Å½õ ¦ºÖòО¢ø¨Ä. ÌÈ¢ôÀ¡¸ ƒôÀ¡É¢ø þÐ ¾¨¼ ¦ºöÂôÀð¼ Å¢¨Ç¡ð§¼.

¬í¸¢§Ä ¦Á¡Æ¢Â¢ý ¸ÄôÀ¡ø ¿õ ¦Á¡Æ¢Â¢ý º¢Èô¨À þÆóÐ ÅÕ¸¢§È¡õ, «¾ý Å¢¨Ç¡ðθǡø ¿ÁÐ À¡ÃõÀ¡¢Â Å¢¨Ç¡ðθ¨Ç þÆó§¾Å¢ð§¼¡õ. ƒóÐ ¿¡ð¸û Å¢¨Ç¡Îõ ´§Ã Å¢¨Ç¡ðÎ þó¾ Å¢¨Ç¡𼡸ò¾¡ý þÕì¸ ÓÊÂÔõ. þó¾ Å¢¨Ç¡𨼠À¡÷ôÀ¾¡ø ´Õ¿¡û ÓØÅÐõ Å£½¡Å¨¾ À¡÷츢§È¡õ.

¯Ä¸ì§¸¡ô¨À ÐÅíÌžüÌ ÓýÒ 3ƒ¢ «¨Ä¸ü¨È ÀüÈ¢ §Àº¢Åó¾Å÷¸û ¯Ä¸ì§¸¡ô¨À ÐÅí¸¢Â À¢ÈÌ 3ƒ¢ «¨Ä¸ü¨È¨Â ÁÈóÐ ¸¢¡¢ì¸ð¨¼ ÀüÈ¢§Â §Àº¢É÷. þô¦À¡ÆÐ IPL ¾ýÉ¡ø ÓÊ󾨾 ¦ºöÐ ÅÕ¸¢ÈÐ. þó¾¢Â¡ ¯Ä¸ì§¸¡ô¨À¨Â ¦ÅýÈÐ ¸¢¡¢ì¸ð Á£¾¡É ¬÷Åò¨¾ þó¾¢Â÷¸Ç¢¨¼§Â þýÛõ «¾¢¸ô¸ÎòÐõ. þ¾É¡ø þ¨Ç»÷¸û þýÛõ §¿Ãò¨¾ Å£½ÊôÀ¡÷¸û ±ýÀ¾¢ø ºó§¾¸Á¢ø¨Ä.

þó¾ô §À¡ðʸǢɡø ¿¡Î¸Ù츢¨¼§Â ¿øÖÈ× ²üÀÎõ ±ýÚ «Ãº¢ÂøÅ¡¾¢¸û ±¾¢÷À¡÷츢ýÈÉ÷. ¯Ä¸ì§¸¡ô¨À þÚ¾¢ô§À¡ðÊ¢ø À¡¢¾¡À¸ÃÁ¡¸ þÄí¨¸ §¾¡üȾüÌ ÀÆ¢¾£÷ôÀ¾ü§¸ «ó¾ þɦÅÈ¢À¢Êò¾ º¢í¸Ç ¸¼üÀ¨¼Â¢É÷ ¿¡ýÌ ¾Á¢ú Á£ÉÅ÷¸¨Ç ¦¸¡ñÚûÇÉ÷. Å¢¨Ç¡ðÊø §¾¡üȨ¾ Áɾ¢ø ¨Åò§¾ º¢í¸Çý þ¨¾ ¦ºöÐûÇ¡ý ±ýÚ ¦¾¡¢¸¢ÈÐ. ¬¨¸Â¡ø þó¾ Å¢¨Ç¡ðθǡø ¿¡Î¸Ù츢¨¼§Â ¿øÖÈ× ²üÀÎõ ±ýÀÐõ Å¢¨Ç¡ð§¼.

ƒôÀ¡¨É §À¡Ä þó¾¢Â¡Å¢Öõ ¸¢¡¢ì¸ð¨¼ ¾¨¼ ¦ºö §ÅñÎõ, ¡Õõ ¸¢¡¢ì¸ð À¡÷ì¸ìܼ¡Ð ±ýÀÐ ±ýÛ¨¼Â ¸Õò¾ýÚ. ¦ÅüÈ¢ §¾¡øÅ¢¸¨Ç ¦¾¡¢óЦ¸¡ûÅÐ §À¡ÐÁ¡ÉÐ. þ¾ü¸¡¸ ´Õ ¿¡û ÓØŨ¾Ôõ Å£½Êì¸ §¾¨Å¢ø¨Ä.............

Sunday 20 February 2011

களப்பிரர் காலம்-3

சமத்துவ மக்கள் கட்சி

இதன் தலைவர் சரத் குமார். நாட்டாமை என்னும் படத்தில் "நெல்லு போட்டால் நெல்லு விளையும் கொள்ளு போட்டால் கொள்ளு விளையும்" என்று விவசாயிகள் அறியாத உண்மையை விவசாயிகளுக்கே புரியவைத்தவர். மேலும் இவர் சூரியவம்சம் படத்தில் ஒரே பாட்டில் எப்படி பணக்காரர் ஆவது என்பது போல பல கருத்துக்களை தமிழ் மக்களுக்கு புரியவைத்தவர்.

ஆகையால் இவர் தமிழகத்தை ஆழ தகுதி உடையவராய் தமிழர்களால் ஆக்கப்பட்டவர். இவர் ச.ம.க வை நிறுவி தொடர்ந்து தீவிர அரசியல் செய்து வருகிறார். இவர் டெபாசிட் போனாலும் கூட கவலையில்லை ஆனால் நாம் ஒரு நாள் ஆட்சியை பிடிக்க மாட்டோமா? என்று ஏங்குபவர்.

எல்லாம் தலைஎழுத்து.......

இளைய தளபதி விஜய்

இவர் டாக்டர் விஜய் என்று போற்றபடுபவர். இவர் படத்தில் வில்லன்களை துவைப்பதால் தளபதி ஆகிவிட்டார். இவர் நடிக்கத பாத்திரமே இல்லை. I.P.S அதிகாரி, ரௌடி, கல்லூரி மானவர் என்று பல கூத்துக்களையும் இவர் செய்துள்ளார். இப்படி படத்தில் நடித்து கைதட்டல் பெற்றதால் இவருக்கும் நாட்டை ஆழ ஆசை வந்து விட்டது. இவரும் அரசியலுக்கு வருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார். இவர்களையெல்லாம் பார்த்ததற்கு பிறகு தான் தெரிந்தது அரசியலை ஏன் சாக்கடை என்கிறார்கள் என்று.

இவர் மீனவர்களுக்கு குரல் கொடுக்கிறார், பல நன்மைகளை மக்களுக்கு செய்கிறார் என்கிறார்கள். எந்த ஒரு செயலுமே அதன் குறிக்கோளை வைத்துத் தான் அது நல்ல செயலா அல்லது அது கெட்ட செயலா என்று முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால் ஒரு ராணுவ வீரன் கொலை வெறியன் என்றே சொல்லப்படுவான். ராணுவ வீரனின் குறிக்கோள் நாட்டை பாதுகாப்பது ஆகையால் அவன் செய்யும் கொலை நல்ல செயல் ஆகிறது. விஜயின் குறிக்கோள் நாட்டை ஆழ வேண்டும் என்பதே தவிர மக்கள் மீது கொண்ட அக்கரை அல்ல.

படத்தில் நடிப்பவர்கள் யாரும் பொருளாதார வல்லுனர்களோ, அரசியல் நிபுணர்களோ அல்ல. இவர்கள் கூத்தாடிகள் இவர்களுக்கு நடிக்க மட்டுமே தெரியும். இவர்கள் திரையரங்கை ஒரு பிரச்சார இடமாக பயன்படுத்தி மக்களிடம் செல்வாக்கை பெறுகிறார்கள். பிறகு அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க போராடுகிறார்கள். ஒரு அறிஞர் ஜனநாயகத்தை பற்றி சொன்னது "11 முட்டாள்களும் 10 அறிவாளிகளும் ஒன்றாய் சேர்ந்து மொத்தம் 21 முட்டாள்களாய் நாட்டை ஆள்வதற்கு பெயர் ஜனநாயகம்". இது தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.

Wednesday 16 February 2011

களப்பிரர் காலம்-2

இலச்சிய திராவிட முன்னேற்ற கழகம்

இந்த கட்சியின் தலைவர் T.R என்று தமிழ் மக்களால் போற்றப்படும் ஒரு நடிகர். இவரது கட்சிக்கு மட்டும் தான் இலச்சியம் இருப்பதை போன்று இலச்சியம் என்ற வார்த்தையை இவர்கட்சி பெயரிலேயே வைத்துள்ளார். இவரது சிறப்பே இவரது அடுக்கு மொழி. அடுக்கு மொழியால் பேசினால் ஆட்சியை கைபற்றி விடலாம் என்பதை முதலில் நம்மிடையே அறிமுகப் படுத்தியவர் அண்ணா. படத்தில் நடித்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று நம்மிடம் அறிமுக படுத்த்தியவர் MGR. புத்திசாலியான இவர் அடுக்கு மொழியால் பேசுவது, படத்தில் நடிப்பது என்று இரெண்டையும் கலந்து இவரது இலச்சியத்தை நோக்கி நகர்கிறார். ஆனால் இவர் இவரது இலச்சியத்தை கட்சி தொண்டர்களுக்கு கூட தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளார் என்பது இந்த கட்ச்சியின் பெரிய சிறப்பு.

இவரது சிறப்புகளை இவரது அடுக்கு மொழிகளை போலவே அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் அந்த காலத்திலேய தொட்டான்குச்சியைய் தட்டிப்பார்த்து அண்ணன் தங்கை பாசத்தை தமிழர்களுக்கு உணர்த்தி பலத்த கைதட்டலை பெற்றவர். இவர் சகல கலா வல்லவர், அதாவது ஆடுவது பாடுவது, நடிப்பது, பேசுவது, அரசியல் என இவர் கால் பதிக்காத துறையே இல்லை. அதனால் இவரை பார்த்த பலரும் அண்டார்டிகாவில் இருந்து வந்த அதிசய பிறவியை பார்ப்பதை போலவே பார்கிறார்கள்.

இவர் நடித்த படம் ஒன்றில் ஒரு சண்டையின் போது இவர் சொன்ன "வாடா ஏ மச்சி; வாழைக்க பஜ்ஜி" என்ற அடுக்கு மொழி அனைத்து தமிழர்களின் மனதிலும் பசுமரத்து ஆணி போல் பதிந்தது. எங்கேயாவது சண்டை நடந்தால் கூட மக்கள் இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லியே பிறகே சண்டைக்கு போகிறார்கள் என்று பல செய்திகள் நமக்கு கிடைக்கிறது. இப்படி சிறப்பு மிக்க இவர் வாரம் தோறும் அரட்டை அரங்கம் என்னும் நிகழ்ச்சியில் தோன்றி சன்டிவிக்கு சிறப்பு செய்கிறார்.

இவர் மகன் நடித்த படம் ஒன்றில் இவர் பாடிய பாட்டு இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கது. "யம்மாடி, ஆத்தாடி உன்னே எனக்கு தரியாடி; நீ பாதி நான் பாதி .....; அரச்ச மாவ அரப்போமா? தொவச்ச துணிய தொவப்போமா?;....." என்று தமிழர்களை பார்த்து இவர் கேட்டவுடன், திரை அரங்கில் இருந்த தமிழர்கள் யம்மாடி ஆத்தாடி என்று அலறி அடித்து ஓடினர்.

இப்படி தமிழர்களின் அறிவு வளர அறிவு சார் அடுக்குமொழிகள் பலவற்றை இவர் பேசுவதால் இவர் தமிழகத்தை ஆழ தகுதி உடையவர் ஆகிறார். ஆகையால் இவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்துக்கு தொண்டாற்றி வருகிறார்.

FORWARD BLOCK:

இப்படி ஒரு கட்சி இருப்பது பல நாள் ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு அரசியலை பற்றி தெரியா விட்டாலும் ஆட்ச்சியை பிடிக்க வேண்டும் என்று அயராது உழைப்பவர்.

இது போன்ற கூத்தாடிகளே தமிழக அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பது எமக்கு வேதனை அளிக்கிறது. ஏனைய கூத்தாடிகள் வரும் பதிப்புகளில் தவறாமல் போற்றப்படுவர். தமிழர்களின் கலாச்ச்சார சீரழிவுக்கும், மொழி சிதைவுக்கும் காரணமே இந்த கூத்தாடிகள் தான். ஆகையால் தமிழக சினிமாவை முதலில் புறக்கணியுங்கள் இவர்களின் ஆட்டம் தானே ஒரு முடிவுக்கு வரும்.

Wednesday 9 February 2011

இரண்டாம் களப்பிரர் காலம்...

சினிமா ஆட்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடக்கும் ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். நடிகர்கள் என்பவர்கள் நடிப்பவர்களே, அவர்களுக்கு அரசியலில் நல்லவர்கள் போல நடிப்பதற்கு பெரிய கஷ்டம் ஏதும் இருக்காது. இவர்களுக்கு தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் என்ன அக்கரை இருக்கிறது என்று தான் தெரியவில்லை. இவர்கள் படங்களில் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிற மொழிகழந்து தான் தமிழை பேசுவார்கள் அந்த அளவுக்கு தமிழ் மொழி மீது பற்று. பல நடிகர்களுக்கு இன்னும் தமிழே தெரியாது ஆனால் அவர்கள் தான் தமிழரை பற்றி அதிகம் பேசுவார்கள்(குஷ்பூ- இவர் தமிழ் குடும்பங்கள் உருப்பட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்).

படத்திற்கு வசனம் எழுதியதற்கு பரிசு "தமிழக முதல்வர்" பதவி. எவ்வளவு பெரிய பரிசு. நாம் படித்த வரையில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கூட நாட்டை ஆளவில்லை. ஆனால் படத்துக்கு வசனம் எழுதியவர் நாட்டை ஆள்கிறார். படத்தில் நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற முடிவில் பல நடிகர்கள் உலவுகிறார்கள்.

நாட்டை ஆள்வதோடு மட்டும் நிற்ப்பதில்லை ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள் தான். இன்றைய கட்சிகளில் பல கட்சிகள் இவர்கள் கையில் தான்.
Forward block -Karthi
சமத்துவ மக்கள் கட்சி- நடிகர் சரத்குமார்
லச்சிய திராவிடர் முன்னேற்ற கழகம்- நடிகர் டி. ராசேந்திரன்
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்- நடிகர் விஜயகாந்த்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்- நடிகையாய் இருந்த செல்வி ஜெயலலிதா
திராவிட முன்னேற்ற கழகம் -வசனம் எழுதிய கருணாநிதி
நாம் தமிழர்- நடிகர் சீமான்

இப்படி பல கட்சிகள் சினிமாவின் பிடியில். கட்சிகள் மட்டும் இவர்கள் கையில் இல்லை, பல MP, MLA என்று சுற்றுகிறார்கள்.
நெப்போலியன், ரித்திஷ், எஸ். வீ. சேகர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் ஒன்று பட்டு நின்றாலும் இவர்கள் ஒருபோதும் ஒன்று படமாட்டார்கள்.

வெள்ளையன் வெளியேறிய பிறகு ஆரியர் ஆதிக்கம், பார்ப்பனர் ஆதிக்கம், இன்று சினிமா ஆதிக்கம். இப்படி நம்மீது யாரவது ஒருவர் ஆதிக்கம் செலுத்திக்கொண்டே தான் இருக்கிறார்களே ஒழிய நாம் அடிமை என்ற நிலைமை நீங்கவில்லை. உலக தமிழர்களின் தலைஎழுத்தை எழுதுவதே இந்த சினிமாதான் என்பதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழர்கள் நிழலுக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு அறியாதவர்கள் அல்ல. நம்மை சினிமாவால் திறமையாக நம்பவைக்கிறார்கள் என்பதே உண்மை. என்னதான் செய்வது, நம் வாக்குரிமையை நமது கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்கு பதிலாக நமக்கு பிடிக்காத கட்சி வரகூடாது என்பதற்காகவாவது அனைவரும் தம் ஓட்டு உரிமையை பயன்படுத்த வேண்டும்.

வரும் பதிவுகளில் நடிகர்களின் பல சிறப்பு அமசங்களை காண்போம்....

Wednesday 19 January 2011

அன்புள்ள முதல்வருக்கு...........

பொங்கலுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆவதற்கு காரணம் விழா நாளின் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அப்படி சிறந்த நகைச்சுவை பட்டிமன்றம் ஒன்று ஒளிபரப்பு ஆனது அதன் தலைப்பு "கலைஞரின் புகழுக்கு காரணம் அவரது சமூக தொண்டு, இலக்கிய பணி, அரசியல் சாதனை". இந்த தலைப்பில் தீ.க, காங்கிரஸ், தீ.மூ.க கட்சியை சேர்ந்த பலர் பேசினர் ஆகையால் இந்த பட்டிமன்றம் முழுவதும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இதில் ஆளுக்கு ஒரு தலைப்பில் புதுகோட்டை விஜயா, தமிழச்சி தங்கபாண்டியன், பீட்டர் அல்ப்போன்ஸ், பொன்முடி, ஜகத் ரத்ச்சகன், துறை முருகன், கீ.வீரமணி என அனைவரும் பேசினர். இதில் சுப.வீரபாண்டியனும், கனிமொழியும் பேசியது என்னை மிகவும் கவர்ந்தது.

கனிமொழி சமூக தொண்டு என்று ஆரம்பித்து சிலநிமிடங்கள் வரை "அவர் ஏன் மேடையில் அழுகிறார்?" என்ற கேள்வியோடு பார்த்து கொண்டிருந்தேன் பிறகு தான் தெரியவந்தது அவர் அழவில்லை பேசுகிறார் என்று. அவர் பேச ஆரம்பித்தவுடன் "தமிழருக்கு சூடு பிறக்க வேண்டும் சுரணை பிறக்க வேண்டும் என்று கலைஞர் சமூக தொண்டு ஆற்ற வந்தவர் என்றார்" இதை கேட்ட எனக்கு சிரிப்பை அடக்க இரண்டு நிமிடம் ஆனது.

சுப.வீரபாண்டியன் பேசியது "பம்பரம் கலைங்கருக்கு சின்னமாக இருப்பதை விட்டுவிட்டு யார் யாருக்கோ சின்னமாக இருக்கிறது என்றார்" காரணம் இவர் பம்பரம் மாதிரி சுழல்கிராராம். பத்தாத குறைக்கு "நிர்க்கமுடியாதவன் எல்லாம் நிற்பேன் என்கிறான்" என்று விஜயகாந்தை ஜாடையாக சொன்னார். இப்படியே அனைவரும் கலைங்கருக்கு கடைசிவரை ஜால்ரா போட்டதை முதல்வர் கண்சிமிட்டாமல் பார்த்து பூரித்துக்கொண்டிருந்தார்.
இறுதியாய் அன்பழகன் தீர்ப்பு என்று ஒன்றை சொல்ல இனிதை முடிவடைந்தது சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்.

கேரளா, கர்நாடக, ஆந்த்ரா என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது தமிழகம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் என்று சிறப்பான கவிதையை பாடி தமிழர்களுக்கு தமிழ் நாட்டின் பெருமையை உணர்த்தியவர். ரயில் வராது என்பதை உறுதி படுத்தியபின் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர்.இப்படி இவர் சாதனைகள் அளப்பரியது.

பொங்கலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னாள் தான் தமிழக மீனவர் கொலை சிங்கள ராணுவம் அட்டூழியம் என்பதை பார்த்தோம். இவர் இது நாள் வரை கடிதத்தை எழுதுகிறாரே அன்றி எந்த பயனும் இல்லை. அந்த இன வெறி பிடித்த சிங்களவன் கொல்வதை நிறுத்துவது போல் தெரியவில்லை. பிராந்திய வல்லரசான இந்திய மீனவனுக்கே இந்த நிலை என்றால் ஈழத்தமிழரை பற்றி நாம் நினைக்க வேண்டும். தன் மக்கள் அவலத்தை வைத்து அரசியல் பண்ணும் கேடு கெட்ட அரசியல் தமிழக அரசியலாகத்தான் இருக்கும். ஐந்து நிமிட உண்ணா விரதத்தினால் முப்பது ஆண்டு போரை நிறுத்தத்திற்கு கொண்டு வந்த சர்வ வல்லமை படைத்த அரசியல்வாதி இவராகத்தான் இருக்கமுடியும். எப்படியேனும் வாகுகளை பெற வேண்டும் என்பதே இவர்களின் கொள்கை.

இலவசம், இலவசம் என்று எதற்கு எடுத்தாலும் இலவசம். கையாலாகாத சோம்பேறிகளுக்குத்தான் இந்த இலவசம் தேவையே அன்று நமக்கு அல்ல. இப்படி நீங்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள நாங்கள் உங்கள் பட்டி நாய்கள் அல்ல என்பதை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும். உழைக்காமல் வரும் ஊதியம் அதிக நாள் நிலைக்காது என்று அவர் படிக்கவில்லையோ என்னவோ? நமக்கு தெரியவில்லை. உலக தமிழரின் தலைவரான இவர் ஈழ தமிழருக்கு என்ன செய்தார் என்பதை அனைவரும் பார்த்தோம். நாற்ப்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சியாய் இருந்தும் இவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இவரால் தமிழகம் என்ன பயன் அடைந்ததோ?. இவர் நொடிக்கு நொடி உலக தமிழரின் தலைவன் என்று சொல்லும் போது ஈழ தமிழர்கள் சிரிக்க மாட்டார்கள். களப்பிரர்களுக்கு பிறகு தமிழகத்துக்கு இதுவே இருண்டகாலமாக இருக்க முடியும்.

நம் தமிழர்களின் நிலை தான் என்னே! பரிதாபமானது ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தோம், பிறகு பார்பனரின் ஆதிக்கம், பிறகு சினிமாவின் ஆதிக்கம், அடுத்தது இவர் குடும்பத்திற்கு ஆதிக்கம் கை மாறுமே அன்றி தமிழர்களின் அடிமை நிலையில் எந்த மாற்றமும் இல்லை. "காலுக்கு செருப்பும் இல்லை பசித்த பிள்ளைக்கு பாலும் இல்லை உழைத்து உழைத்து மண்ணாய் போனோமட தமிழா" என்று வேதனை படும் விவசாய்கள் எத்தனை. இது தான் தமிழக அரசியலும் தமிழகமும்.

இந்த தமிழர் திருநாளில் நாம், இனவெறி பிடித்த சிங்களனுக்கு சொல்வது இது தான் "இலச்சம் பேர் மடிந்தாலும், ஆயிரம் ஆயிரம் பேர் முள் வேலிக்குள் கிடந்தாலும் தமிழரின் தன்மானத்தை, இன உணர்வை, வீரத்தை எவனாலும் அழிக்க முடியாது. இன்று உங்கள் கை ஓங்கியிருக்கிறது. உயிரிழந்த அப்பாவி தமிழர்களும், மீனவர்க்கும் மண்ணில் விழுந்த விதைகளாக மீண்டும் எழுவார்களே அன்றி குப்பையை போல் மக்கிப்போக மாட்டார்கள். நீங்கள் வென்றதாய் கனவில் கூட நினைக்க வேண்டாம்".

என்றாவது ஒரு நாள் விடியும். இந்த நிலை மாறும் தமிழர்கள் மகிழ்ச்சியாய், அரசியல் உரிமைகளோடு, சுதந்திரமாய், சுரண்டல் இல்லாத சமுதாயமாய், நல்ல தலைவர்களோடு, மானத்தோடு வாழும் நாளும் வரும். நமது லச்சியமில்லாத பயணம் இப்படி ஒரு இலக்கு நோக்கி பயணிக்கட்டும். இதுவே இந்த தமிழர் திருநாளில் நம் உறுதிமொழியாக இருக்கட்டும்.

Wednesday 5 January 2011

லச்சியங்களும் பயணங்களும்...............

நம் மாணவர் சமுதாயத்தில் இன்று கனவு காணும் இளைங்கர்கள் பலர் இருந்தாலும் அந்த கனவுகள் சொல்லும்படி பெரிய குறிக்கோளை கொண்டதோ அல்லது ஒரு பெரிய இலச்சியத்தை அடைவதாக இருக்கும் படியாக எனக்கு தோன்றவில்லை. என் சக நண்பர்கள் பலருக்கு லச்சியம் செட்டில்(settle) ஆவதாம். அந்த செட்டில் என்ற ஆங்கில வார்த்தைக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் நீண்டு கொண்டே போனாலும் இதன் சாராம்சம் 'எந்த வித அக்கரயும் யார் மீதும் இல்லாமல் தானும் தன் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பது'. என்னே அற்புதமான கனவு, தீரிய சிந்தனை என்பதை நாம் உணரலாம்.

இதற்க்கு காரணம் சூழ்நிலை என்று பலர் சொல்வதை நான் கேட்டேன் அதாவது சூழ்நிலை காரணமாக சுயநலமாக இருக்கிறார்களாம் என்னே ஒரு அற்புதமான விளக்கம். உண்மையில் இவர்கள் பாடத்தை தவிர மற்ற புத்தகங்களையோ, செய்தித்தால்கலையோ படிக்க நினைப்பது கூட இல்லை. இதனால் மாணவர்கள் கிணத்து தவளைகள் போலவே இருக்கிறார்கள். காக்கைக்கும் குருவிக்கும் கூட வித்யாசம் தெரியாத அளவுக்கு. மீடியா குறிப்பாக இன்றைய தமிழ் சினிமாக்கள் இயன்றவரை மாணவர்களை சீரழிக்கிறது. "சில்லினு ஒரு காதல்" என்ற படம் இது போன்ற உயர்ந்த குறிக்கோள்களை(settle) மாணவர்களுக்கு விதைத்தது.
நம்பிக்கை வரட்சியில் வாடும் நம் மாணவர்களுக்கு செட்டில் ஆவது ஒரு பெரிய சாதனையாகவே தெரிகிறது. அப்படி செட்டில் ஆன பின் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போய் வந்து விட்டால் அது ஒரு பாரதரத்னா விருது வாங்கியதற்கு சமமாக எண்ணுவார்கள். இப்படி சிந்திக்கும் மாணவர்களால் யாருக்கும் எந்த வித பயனும் இல்லை.

குறிக்கோள் போகட்டும் இவர்களின் பொழுது போக்கு பற்றி சொல்லியே தீரவேண்டும். Facebook, Farmville என்ற அறிவு சார்ந்த செயல்களில் பொழுது முழுவதயும் போக்குவது. Farmville என்பது ஒரு வேளாண்மை செய்யும் விளையாட்டு. நான் பார்த்த வரையில் இது விளையாடும் அனைவரும் ஆடு, மாடு, பன்றி என்று கணினியில் வகை வகையாக மேய்க்கிறார்கள். இவர்களின் பெற்றோர் ஆடு, மாடு மேய்த்து பையன் சிரமப்படக்கூடாது என்று தான் கல்லூரியில் சேர்த்தார்கள் ஆனால் இவர்கள் கல்லூரியிலும் பன்றி வரை மேய்ப்பது வருந்தத்தக்கது. இதில் என்னை வேறு பலர் அழைத்த(request) வண்ணம் இருக்கிறார்கள் அவர்களுக்கு என் பதில்,"நண்பர்களே நான் கல்லூரிக்கு படிக்க வருகிறேன் பன்றி மேய்க்க அல்ல". இப்படியும் பொழுது போகவில்லை என்றால் ஒருவரை தேடி பிடிப்பார்கள். ஒருவன் கிடைத்துவிட்டால்(நகைக்க) இவர்களுக்கு சக்கரை சாப்பிட்டதற்கு சமம் ஏதாவது ஒன்று அவனை பற்றி பேசி பொழுதை ஓட்ட வேண்டும். குறிப்பாக ஏதாவது ஒரு சமூக சிந்தனை உள்ள மாணவன் எதாவது சொல்லமாட்டானா என்று பனங்காட்டு நரி போல பார்த்துக்கொண்டே இருப்பார்கள் எதாவது சொல்லிவிட்டால் போதும் அன்றைய பொழுது அவன் விளையாட்டுப்பொருள் தான்(எனது அணுபவம்).

"உள்ளத்தனையது தான் உயர்வு" நினைப்பதாவது உயர்வாக நினையுங்கள். பிறகு அதற்கு ஏற்ப உயர்வு இருக்கும். செட்டில் ஆவது ஒரு குறிக்கோளோ லட்ச்சியமோ அல்ல. படித்துத்தான் செட்டில் ஆக வேண்டும் என்பதில்லை. படிக்காமல் வாழும் அனைவரும் செட்டில் ஆகவில்லையா என்ன. உணவு உடை இருப்பிடம் இவை சரியாக கிடைப்பது செட்டில் என்ற வார்த்தைக்கு சரியான பொருளாகும். ஆகையால் எதாவது சாதிக்க வேண்டும் என்று கனவு காணுங்கள். செட்டில் ஆவதை ஒரு லச்சியமாகவே கொண்டிருக்காதீர்கள். இந்த இலச்சியத்தை கையால் ஆகாதவர்கள் மட்டுமே கொண்டு இருப்பார்கள் ஆகையால் இந்த லச்சியம் நமக்கு துளிகூட பொருந்தாது.



Tuesday 28 December 2010

விநாயகர்...........

விநாயகர் கோயில் இந்தியாவில் மக்கள் வசிக்கும் வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் விநாயகரின் சக்தி தான் என்று பல பூசாரிகள் தெரிவித்தனர். இந்த கதையை கேட்டவுடன் நானும் விநாயகரின் பரம பக்த்தன் ஆகி விட்டேன். இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த கதை இதோ

விநாயகரின் சக்தி:
விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கட்டை தான். அவர் டயட்டில் இருந்தாலும் கூட கொழுக்கட்டை தான் சாபிடுவாரம். அதனால் தான் இந்த கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்திக்கு கூட அதிக அளவில் செய்து விநாயகருக்கு கொடுக்கிறார்கள். இந்த கொழுக்கட்டை நாளடைவில் இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை என்று பல விதமாக பரிமாணம் எடுத்தது.

விநாயகரும் அறிவியலும்:
சரி கதைக்கு வருவோம். ஒரு விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் அதிகமாக கொழுக்கட்டையை சாப்பிட்டு விட்டார். அது இரவு நேரம் வேறு. அதிகம் சாப்பிட்டதால் நடக்க முடியாமல் திணறிய விநாயகர் கீழே விழுந்து விட்டார். இதை பார்த்த சந்திரன் சிரித்துவிட்டார் அதனால் கோவமடைந்த விநாயகர் சந்திரனை பார்த்து "நீ அழகாய் உள்ள ஆணவத்தில் தானே என்னை பார்த்து சிரிக்கிறாய் அதனால் நான் உன்னை சபிக்கிறேன் மாதத்தில் தேய்ந்து தேய்ந்து ஒருநாள் தெரியாமல் போய்விடுவாய் மீண்டும் வளர்ந்து வளர்ந்து ஒருநாள் மட்டுமே தெரிவாய்" என்றார் விநாயகர். இதனால் தான் மாதம் ஒரு முறை பௌர்ணமியும் அம்மவாசையும் வருகிறது. விநாயகர் சபிப்பதற்கு முன்னாள் வரை தினமும் பௌர்ணமியாகவே இருந்ததாம். பார்த்தீர்களா? இது தான் விநாயகரின் சக்தி.

எங்கள் கல்லூரியில் உள்ள விநாயகர் கோவிலில் பக்த்தர்கள்(மகளிர்) கூட்டம் "என்னடா இன்று விநாயகர் சதுர்த்தியா?" என்று சந்தேக்கப்படும் அளவுக்கு அலைமோதும். இந்த பக்தர்கள் தினமும் வருவதையும் போவதையும் தினமும் காண்பவர் கல்லூரி watchmam. "என்னுங்க நம்ம கல்லூரியில் பகத்தர்கள் அதிக மாயிட்டே போற மாதிரி தெரியுது? இன்னைக்கு சுண்டலும் இல்லை பொங்கலும் இல்லை அப்பறம் எதற்கு இத்தனை கூட்டம்?" என்று நான் கேட்க, அவர் "அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்று தேர்வு நடக்கிறதாம் அதான் இத்தனை கூட்டம்" என்றார்.

இந்த பக்தர்களில் ஒருவரை கேட்டதற்கு அவர் "நான் விநாயகர கும்பிட்டிட்டு போனேன்னா நான் paas பன்னிடுவேன்" இதனால் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிப்பது எனவென்றால் படித்தால் தான் மதிப்பெண் வருமே அன்றி கும்பிட்டால் வராது. ஆஞ்சநேயர் விவேக்குக்கு படத்தில் உதவுவதை போல நமக்கு விநாயகர் உதவுவார் என்று கனவு காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது உங்கள் நாளயவிடியல்.